Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 6 பேரை, மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை, பாசையூர், கந்தர்மடம் பகுதியில் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது, மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேபோன்று சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை, மின்சார நிலைய வீதி பகுதியில் பிரதான மின் வடத்திலிருந்து மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சட்டவிரோத மின்சார பாவனையாளர்கள் 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
27 Jun 2025