Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 03 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
நெல்லியடி சந்தையின் தேவைக்காக பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் மோட்டார், இனந்தெரியாத நபர்களால் கடந்த 30ஆம் திகதிக்கும் 2ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் களவாடப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
30ஆம் திகதி சந்தையை மூடிவிட்டு, 2ஆம் திகதி மீண்டும் திறந்த வேளையில் மோட்;டார் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நெல்லியடி வர்த்தக சங்கச் செயலாளர் இ.சிறிரஞ்சனுக்கு வர்த்தகர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தினூடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
நீர் இறைக்கும் இயந்திரம் திருட்டுப் போனமையால் சந்தையின் நீர்த் தேவைக்காக இரண்டு நாட்;களாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
1 hours ago