Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையிலான அகழ்வுப் பணிகள், நேற்று (11) மாலை, முதல் ஆரம்பிக்கப்பட்டன.
கிளிநொச்சி அறிவியல் நகரின், யாழ். பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்துக்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே, இவ் அகழ்வுப் பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர், பிரதேச கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இவ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, குறித்த அகழ்வுப்பணிகளில், தற்போது வரை, எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago