2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், பாடசாலைக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர்களுக்கு எதிராக, போக்குவரத்துப் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  

இன்று (02) காலை, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றோரில் சிலரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் சிலரும் தலைக்கவசம் அணியாது பயணித்துள்ளனர்.   இதனை அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார், அவர்களை மறித்து வழக்குத் தாக்கல் செய்வதற்கான பத்திரங்களை வழங்கியிருந்ததுடன், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .