2025 ஜூன் 30, திங்கட்கிழமை

துணுக்காய் கிராமங்களில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகின்றன

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காயின் ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி எடுத்துச்செல்லப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் இக்கிராமங்களின் அபிவிருத்திச் சங்கத்தினர் முறைப்பாடுகள் தெரிவித்துள்ள போதிலும் இச்செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

ஐயன்கன்குளத்தில் உள்ள பொலிஸாரின் உதவியுடனேயே மரங்கள் களவாக வெட்டியெடுத்துச் செல்லப்படுவதாகவும் பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த துணுக்காய் பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X