2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தொழிலாளர் தினத்தை முல்லை. மீனவர்கள் புறக்கணிப்பு

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது மாவட்டத்தில் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், தொழிலாளர் தினத்தை நேற்றைய தினத்தில் (01) புறக்கணித்துள்ளனர்.

தொழிலாளர் தினமாகிய நேற்று, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களினால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், தமது மீன்பிடி தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இன்றுவரை தமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என  முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X