2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தகரக் கொட்டகைகளால் மாணவர்கள் சிரமம்

Kogilavani   / 2017 ஜனவரி 31 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் தகரக் கொட்டகைகளில் இயங்கும் பாடசாலைகளை நிரந்தர கட்டடங்களாக மாற்றுமாறு பெற்றோர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி வலயப் பாடசாலைகள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு இயங்கத் தொடங்கிய நிலையில், பல பாடசாலைகளில் தற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. அவை தகரங்களினாலும் உருவாக்கப்பட்டன.

தகரக் கொட்டகைகளில் மாணவர்களால், கல்வி கற்க முடியாது. வெயில் நேரத்தில் வெப்பத்தினாலும் மழை காலத்தில் மழை ஓசையினால் நெருக்கடியினையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையில், தகரக் கொட்டகைகளை நிரந்தரக் கட்டங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம், பூநகரி விநாசியோடை உட்பட பல பாடசாலைகள் தற்போது தகரக் கொட்டகைகளில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .