2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனுக்கு வரவேற்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும்  நாடாளுமன்ற குழுவின் உப தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு சனிக்கிழமை (05) மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்திலிருந்து நேற்று சனிக்கிழமை காலை, நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தொடரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்,  மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட்தந்தையர்களிடம் ஆசிபெற்றார்.

இதன்போது, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மகத்தான வரவேற்பளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .