2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக செயற்திட்டங்கள் அமைய வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் நலன்சார் திட்டங்களை திட்டமிடும்போது மாவட்டத்தின் நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையில் புதன்கிழமை(02) நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, எம்.பி.நடராசா, ஜயதிலக மற்றும் தர்மபால செனிவரத்தின ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்றங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள்,  எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்கள் எதிர்காலத்தில் மாதமொருமுறை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X