Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 08 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பிரான்பற்று புளியடி அம்மன் ஆலயத்தில்; சனிக்கிழமை (07) இடம்பெறவிருந்த வேள்வி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததையடுத்தே வேள்வி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாhர் மேலும்; தெரிவித்தனர்.
வருடா வருடம் இடம்பெறும் இவ்வேள்வியின் போது ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சனிக்கிழமை (07) காலை ஆயிரக்காணக்கான ஆடுகள் வேள்விக்காக கொண்டு வரப்பட்டபோதும், அனுமதி மறுக்கப்பட்டமையால் கொண்டு வந்த ஆடுகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து, மீண்டும் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
22 minute ago
57 minute ago