Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'முல்லைத்தீவு, நாயாறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், கடந்த ஜனவரி 25ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையில், மத்திய அரசாங்கம் பாரபட்சமான முறையில் நடந்துகொள்ளக்கூடாது. மாவட்டத்தின் சட்டவிரோத மீன்பிடிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
சட்டவிரோத மீன்பிடிகளை அனுமதிக்க முடியாது. நாயாறில் பிற மாவட்ட கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடியினை கட்டுப்படுத்துவதற்கு இறுதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குழுவொன்று செயற்படுவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவினை விரைந்து செயற்படுத்த வேண்டும்' என்றார்.
'நாயாற்றின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் தங்குவாடிகள் அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கக்கூடாது. அதேநேரம் நாயாற்றில் நபரொருவர் நாற்பது படகுகளில் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாவட்டச் செயலாளர், சமாசத்தலைவர், பொலிஸார், இராணுவம், பிரதேச செயலாளர், கடற்றொழில் திணைக்களம், பிரதேச சபை என்பன கூட்டாக இயங்கி நாயாற்றுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் இது தொடர்பான அறிக்கையை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கையளிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன' என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago