2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச மருத்துவமனையில் நிலவும் குடிநீர் பிரச்சினை காரணமாக நோயாளர்களை விடுதியில் தங்கவைத்து சிகிச்சையளிக்க முடியாதுள்ளதாக, பூநகரி மருத்துவமனை மருத்துவரால் புதன்கிழமை (02) இடம்பெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இடப்பெயர்வுகளுக்கு முன்னர் பூநகரி வாடியடிச் சந்தியில் மருத்துவமனை குடிநீர் வசதிகளுடன் இயங்கிவந்தது. போருக்குப் பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ளதன் காரணமாக வாடியடிச் சந்திக்கு அண்மையில் புதிய பிரதேச மருத்துவமனை அமைக்கப்பட்டது. தற்போது இம்மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, பழைய மருத்துவமனையிலுள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தற்போதைய புதிய மருத்துவமனைக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு முகாமின் இராணுவ பொறுப்பதிகாரிக்கு பூநகரிப் பிரதேச செயலாளரூடாக கடிதம் அனுப்புவதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X