2025 ஜூலை 12, சனிக்கிழமை

நீர் விநியோகம் இடைநிறுத்தம்

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழான குளங்களின் நீர் விநியோகம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக, இரணைமடு, அக்கராயன்குளம், கரியாலைநாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு, கல்மடு, கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறு, வன்னேரிக்குளம் ஆகியவை உள்ளிட்ட சகல குளங்களின் நீர் விநியோகம் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சனிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வரட்சியான சூழ்நிலையிலும் இக்குளங்களில் இருந்து நீர் விநியோகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .