Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 13 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம், இன்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் வவனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
புதிய அரசாங்கம் பதிவியேற்றதன் பின்னர் இடம்பெறும் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டமாக இது இடம்பெற்றது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களை முழுமையாக உள்ளடக்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மக்களும் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், விவசாய திணைக்களத்துக்கு உரித்தான காணி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்கள் அதிகாரியொருவர் கூட்டிக்காட்டியதுடன் அதனை பெற்றுத்தருமாறும் கூட்டத்தில் கோரியிருந்தார்.
இக் கூட்டத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா, எம்.பி. நடராஜா, ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
32 minute ago
38 minute ago