Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
பிரதேச சபை உறுப்பினர் எனும் மக்கள் பிரதிநிதிப் பதவி கூட இன்றி, மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எனும் பதவியைக் கொண்டு, தான் பல அளப்பரிய பயன்தரும் வேலைதிட்டங்களை முன்னெடுத்ததாகத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி, இது மிகப் பெரிய சாதனையாகவே தான் கருதுவதாகவும் கூறினார்.
மன்னாரில், நேற்று (08) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக உங்களில் ஒருவனாக உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து, பல்வேறு விதமான சேவைகளை உங்களுக்கு தான் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
தன்னை நீங்கள் யாவரும் ஆதரித்து, தனது சேவைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளச் சந்தர்ப்பம் வழங்குமாறு, மக்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்வதாக, அவர் கூறினார்.
45 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
24 Mar 2026