Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 மே 13 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் பகுதியில், நிiவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கோ, மக்கள் கூடுவதற்கோ, முல்லைத்தீவு பொலஜஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள்.
கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, 16ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை, முள்ளிவாய்க்கால் பகுதியில், எந்த நிகழ்வும் நடத்தகூடாது என்றும் மக்கள் கூடக் கூடாது என்றும், பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும், கோரி, முல்லைத்தீவு பெரிஸார்; நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்கள்.
து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
ஏ.ஆர் 418/21 வழக்கு இலக்கத்தின் கீழ், முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பெற்று, உரியவர்களிடம் வழங்கவுள்ளதாக, பொலிhஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
4 hours ago