2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நெடுங்கேணி பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது

க. அகரன்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

இன்று (17) உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நெடுங்கேணி பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.

தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ச.தணிகாசலம், தமிழர் விடுதலை கூட்டணியின் ஜெ.ஜெயரூபன் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

இதன்போது இருவரும் சம வாக்குகளை பெற்ற நிலையில், திருவுள சீட்டு மூலம் தமிழ் கூட்டமைப்பின் ச.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உப தவிசாளருக்கான தெரிவில் பொதுஜன பெரமுன சார்பில் க.விக்கிரமபால, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டி இட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா 14 வாக்குகளைப் பெற்று உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X