Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தின், மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 450 குடும்பங்கள் போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்கயுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதிமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒரு பஸ் மாத்திரம் காலையில் சேவையில் ஈடுபடுகின்றது. அதன் பின்னர் எந்த பஸ் சேவையும் இந்தக் கிராமங்களுக்கு இல்லை.
பஸ் சேவை இல்லாமையால், 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனைக்கும் 25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கும் சென்று வருவதில் தாங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டால், முல்லைத்தீவு பொது மருத்துவமனை, மாவட்டச் செயலகம், கரைதுறைபற்று பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு தாங்கள் சிரமமின்றி சென்று வரமுடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago