Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கேதிஸ்வரம் புதைகுழி மனித எச்ச மாதிரிகளை சட்டத்தரணிகள் முன்னிலையில் பொதியிட்டு பகுப்பாய்வுக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார் புதைகுழி சம்பந்தமான வழக்கு மன்னார் நீதிமன்றில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (11) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றத்தடுப்பு உதவி பொலிஸ் அதிகாரி நானக்க பண்டார, கே.ஏ.மனோச் மற்றும் காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன், பிறிமூஸ் சிராய்வா லோகூ ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.
குற்றபுலனாய்வு பிரிவினரால் மேலதிக அறிக்கை ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அந்தவேளையில் காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன்,
இந்த வருடம் ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பித்த நகர்த்தல் பத்திரம் மூலம் சட்டத்தரனிகளாகிய நாங்கள் மூன்று நிறுவனங்களின் பெயர்களை சிபாரிசு செய்திருந்தோம்.
அந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை இந்த நீதிமன்றம் தெரிவு செய்து கால நிர்ணய வயதை அளவிடுவதற்கு ஏதுவாகும் என கண்டு கொண்டால் அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் அல்லாவிடில் இது விடயமாக நாங்கள் எங்களுக்கு ஒரு கால நேரம் தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் மன்றில் கோரியிருந்தார்கள்.
சட்டத்தரனிகளின் கோரிக்கைகளை மன்று கவனத்தில் எடுத்து மூன்று நிறுவனங்களின் ஏதாவது ஒன்றுக்கும் இந்த மாதிரிகளை அனுப்பும்படியும் இதை அனுப்புவதற்கு முன்னர் நீதிமன்றின் அனுமதியை பெறப்பட வேண்டும் எனவும் அத்துடன் பாதிப்படைந்த அதாவது காணாமல் போனவர்களின் சார்பாக ஆஐராகியிருக்கும் சட்டத்தரனிகளுக்கு முன்னால் இந்த மாதிரிகள் பொதியிடப்பட்டு அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
சட்டத்தரனிகள் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றில் பெறப்பட்ட அறிக்கையை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி இவ்வறிக்கையை மன்றில் சமர்ப்;பிக்கும்படி நீதவான் உத்தரவு பிறப்பித்தார் என்று சுட்டிக்காட்டினார் என்றார்.
இந்த நேரத்தில் குற்றபுலனாய்வு பிரிவினர் இந்த எச்சங்களை அளவிடுவதற்கு பெருந்தொகையான செலவுகள் ஏற்படும் எனவும் நீதிமன்றின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
54 minute ago
1 hours ago