2025 ஜூன் 28, சனிக்கிழமை

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

George   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி  கனகபுரம் கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையிலான விழிப்;புணர்வு கருத்தரங்கு, கிளிநொச்சி மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (02) நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனை போதைப்பொருள் பயன்பாடு என்பவற்றைத்தடுக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட மதுவரித்திணைக் களத்தினால் ஐந்து கிராமங்களில் போதைப்பொருள் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்;றன.

அந்தவகையில், தெரிவு செய்யப்பட்ட கனகபுரம் கிராமத்துக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, கனகபுரம் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கிராம மக்கள் எனப்பலர் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .