2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை

Gavitha   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தின் கீழ், 985 ஏக்கர் நிலப்பரப்பில், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள், நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி, உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, புதுமுறிப்பு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல், இன்று (04) நடைபெற்றது.

இதில், 985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள்,  நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழுள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களின், கல்மடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்பு குளம், பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம் ஆகிய குளங்களிலுள்ள நீரின் அளவுகளைக் கொண்டு,  பிரமந்தனாறுக்குளம், கனகாம்பிக்கைக்குளம் ஆகிய இருகுளங்களின் கீழும், சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய மூன்று குளங்களின் கீழ், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அக்கராயன்குளத்தின் கீழ், 1116.5 ஏக்கரும் புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கரும், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி கலந்துரையாடலில், நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.செந்தூரன், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .