Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியாவில் அமைந்துள்ள இ.போ.ச பஸ் நிலையத்தில்இருந்தே, தமது சேவையை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என, இ.போ.ச ஊழிர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம், முடிவுக்கு வந்துள்ளதுடன் புதிய பஸ் நிலையம் சில நாட்களுக்கு மூடப்படவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பணி பகிஷ்கரிப்பு மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பஸ் சேவையினை சீர் செய்வதற்காக, வவுனியா மாவாட்டச் செயலகத்தில் சுமார் 5 மணி நேர கூட்டம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்குமிடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து தரப்பினர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வட மகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், நான் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான ஜயதிலக, மயூரன் உட்பட அரசாங்க அதிபர், பொலிஸார்,இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள்,தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து பல மணி நேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
டெனிஸ்வரன் தலைமையில், மிக விரைவில் இணைந்த நேர அட்டவனையினை தயாரிப்பதாகவும் அதனை மிக விரைவில் அமைச்சரிடம் கையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையம், மாவட்டத்தில் இருந்து நீண்ட தூரத்துக்கான பஸ் நிலையமாக செயற்படுமெனவும் அது வரை? இரு தரப்பினரும் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்களோ அது போல் முரணபாடுகள் இன்றி செயற்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட உள்ளுர் சேவைகளை, பழைய பஸ் நிலையத்தில், இரு தரப்பினரும் இணைந்து செயற்படும் வகையில், இணைந்த நேர அட்டவணையை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே இதற்கு இரண்டு தரப்பினரும் உடனபட்டுள்ளனர். அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்” என்றார்.
அங்கு கருத்து தெரிவித்த வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், “எமது பொது மக்களுக்கு பாதுகாப்பான சேவையினை நடத்தவேண்டும் என்பதற்காகவே கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன்.
இரண்டு தரப்பினருக்குமிடையில் உள்ள முரண்பாட்டை ஆராய்கின்றபோது இணைந்த அட்டவணை இல்லாமை முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, வெளி மாவட்டங்களுக்கான இணைந்த நேர அட்டவனை தயார் செய்யப்பட்டிருக்கின்றது.
இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையினரின் கோரிக்கையான மாவட்டங்களுக்கிடையிலான உள்ளுர் சேவைக்கான இணைந்த நேர அட்டவணையும் தயார் செய்து அதனை அமுல்படுத்தப்பத்தவும் தாயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
ஆகவே, தனியார் துறையினரிடமும் அது தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இணைந்த நேர அட்டவணை தயார் செய்யப்பட்டவுடன், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் யாரேனும் அதனை மீறுவார்களேயானால் ஒழுங்கு விதிகளை மீறுவர்களேயானால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல், பல இலட்சம் ரூபாய் பெறுமதியில், புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது. இணைந்த நேர அட்டவணையை ஒரு வார காலத்தில் தயார் செய்து தருகின்றபோது மறுதினத்தில் இருந்தே புதிய பேரூந்து நிலையம் ஆரம்பிக்கப்படும்” என்றார்.
இதேவேளை, கூட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர், வட மாகாண போக்குவரத்து அமைச்சர், சுகாதார அமைச்சர், வட மாகாணசபை உறுப்பினர்கள், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடத்துக்குச் சென்று, உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago