2025 ஜூலை 12, சனிக்கிழமை

பூநகரி பிரதேச மாணவர்களுக்கு பஸ் இல்லை

Gavitha   / 2017 பெப்ரவரி 11 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

பூநகரி பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து, பூநகரி மகா வித்தியாலயத்துக்கு வரும் மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீரான பேரூந்து சேவைகள் இன்மையால் உரிய நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்வதில், மாணவர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கௌதாரிமுனை, பரமன்கிராய், பள்ளிக்குடா உட்பட பல கிராமங்களின் மாணவர்கள்,  காலை வேளைகளில், பஸ்களில் பாடசாலைக்கு வந்தாலும், மாலை வேளையில் மாணவர்கள் வீடு திரும்பும் போது, பஸ் இருக்காததன் காரணத்தினால், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரிப் பிரதேசத்தினைப் பொறுத்த வரை, நீண்ட தூரங்களில் உள்ள கிராமங்களில் இருந்து முதன்மைப் பாடசாலையான பூநகரி மகா வித்தியாலயத்துக்கு, மாணவர்கள் வருகை தருவதில் நெருக்கடி நிலைமை உள்ளதாக பெற்றோர்களினால் தொடர்ச்சியாக கல்வி அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இருந்தும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .