2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் பாம்புக்கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞன் ஒருவர், இன்று வியாழக்கிழமை அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார், தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த லெபோன் தற்குரூஸ் ஜெபநேசன் (வயது 26) என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 29 ஆம் திகதி இரவு தோட்டவெளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காட்டுப்பாதையூடாக உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த இளைஞன் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை இரவு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இங்கிருந்து  மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் இன்று வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X