2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

போராட்டத்துக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள, காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் 47ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர், போராட்ட இடத்துக்கு வந்து, தமது ஆதரவை வழங்கி மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தொடர்ச்சியாக இந்த மக்களை இவ்வாறு தவிக்க விடாது. அனைத்து அமைப்புக்களும் முன்வந்து இம்மக்களுக்கு ஆதரவு வழங்கி இம்மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வரவேண்டும்” என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .