2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிரதேச செயலகங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

வரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு  ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கும்,  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டுள்ளன.

பின்னர், அவை நான்கும்  கரைச்சி, கண்டாவளை,  பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலகங்களுக்கு  கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,  நான்கு பிரதேச செயலாளர்களிடம் இதனை கையளித்துள்ளார்.

இதன் போது மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .