2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிறந்த சிசுவை எரித்த தாய் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் பிறந்து ஒரு நாளான சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சிசுவின் தாய், கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் தாய்க்கு, ஞாயிற்றுக்கிழமை (2) இரவு குழந்தையொன்று பிறந்துள்ளது. அக்குழந்தையை, குறித்த தாயார் வீட்டின் அருகிலுள்ள பற்றை காடு ஒன்றில் குப்பைகளுடன் சேர்த்து எரித்துள்ளார்.

இந்த சம்பவங்களை அவதானித்த குறித்த பெண்ணின் 13 வயதான வாய் பேச முடியாத மகள், இன்று காலை அதனை  ஆசிரியரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதையடுத்து, தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .