Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விபத்தில் காயமடைந்த நபரை விபத்து ஏற்படுத்திய வாகனத்திலிலேயே வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டுச்சென்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
தனது பேரப்பிள்ளையின் பிறந்த நாளுக்காக பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
யாப்பாணம் நோக்கிப் பயணித்த சைக்கிள் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பனிக்கன்குளம் மாங்குளத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஆறுமுகம் ஜெயமோகன் என்ற நபரே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் மாங்குளம் வைத்தியசாலை உள்ளதுடன் அங்கு அம்பியூலன்ஸ் வண்டியும் உள்ளது. அன்றைய தினம் வைத்தியரும் கடமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த நபரை அங்கு கொண்டுசெல்லாமல் 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளதால் அவர் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள், பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
31 minute ago