2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புலனாய்வாளர்கள் என்றுக்கூறி கொள்ளையர்கள் கைவரிசை

George   / 2016 மே 06 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பெரிய பரந்தன்  பகுதியில்  தனியாக  உள்ள  வீடொன்றினுள் வெள்ளிக்கிழமை அதிகாலை  ஐந்து மணியளவில்  கத்தி மற்றும்  விளையாட்டு  துப்பாக்கியுடன்  உள்நுழைந்த  நான்குபேர்  கொண்ட கொள்ளைக்  குழுவினர் வீட்டில்  இருந்த வர்கள் அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த தாய், மகள் மற்றும் தாத்தா  ஆகியோரை  அச்சுறுத்தி   48 ஆயிரம்  ரூபாய்  பணம், ஒரு பவுன்  தங்க கைசங்கிலி  மற்றும் அலைபேசி என்பனவே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தாங்கள்  புலனாய்வாளர்கள் என்றும், குறித்த வீட்டில்  கைத்துப்பாக்கி  உள்ளதாக  தகவல்  கிடைத்து வந்ததாகவும் கூறி, வீட்டினுள்  நுழைந்த கொள்ளையர்கள்,  வீட்டை முழமையாக சோதனை செய்துள்ளனர்.

பின்னர், தாம் கொள்ளையிட வந்தாகத் தெரிவித்து கத்தி மற்றும் துப்பாக்கியை  காட்டி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த  சம்பவம்  தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் கிளிநொச்சி பொலிஸ் குற்றத்தடுப்பு  பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X