2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிள்ளையார் ஆலய விக்கிரகங்கள் சேதம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் வி;க்கிரகங்கள் உட்பட ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதென ஆலய பரிபாலனசபையினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று  செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை திருவெம்பாவை பூசை வழிபாடுகளுக்காக ஆலயத்துக்கு சென்றவர்கள், மூலஸ்தான விக்கிரகம் உட்பட பரிவார விக்கிரகங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டிருந்ததை அவதானித்து அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

வழிபாடுகளுக்காக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம், ஆலயத்தின் பிரதான வாயிலில் போடப்பட்டிருந்ததுடன் அதனுடன் பண முடிச்சு ஒன்றும் அருகில் இருந்துள்ளது.

மேலும், இலத்திரனியல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டு, இலத்திரனியல் உபகரணங்கள் நீர் ஊற்றி சேதமாக்கப்பட்டிருந்தன.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X