2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாழடைந்த வீட்டில் இருந்து மிதிவெடி மீட்பு

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குப்பிளான் வடக்கு பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல் துஸ்மந்த தெரிவித்தார்.

சனிக்கிழமை (04) மாலை  குறித்த பகுதியில் விறகு வெட்;ட சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,  மிதிவெடி அடையாளப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

இம்மிதிவெடி, விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மிதிவெடி தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் கட்டளை பெற்றப் பின்னர், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயழிக்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .