2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பன்றிக்கு பதிலாக மூவர் சிக்கினர்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், பன்றிக்கு வைத்திருந்த வெடியில் சிக்கிய மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. 

எள்ளுக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கராசா சந்திரகுமார் (வயது 36), இவரது மகன் சந்திரகுமார் சதீஸ் (வயது 13) மற்றும் மருமகன் எஸ்.ரஜீவன் (வயது 15) ஆகிய மூவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில், தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், நெற்செய்கையை நாசம் செய்ய வரும் பன்றிகளை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு வெடிகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X