2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக அனுமதிக்கான இலவச கருத்தரங்கு

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ்மொழி மூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இவ் இலவச கருத்தரங்கில், உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல், பாடங்களை இனங்காணல் தொடர்பான வழிகாட்டல்கள் இடம்பெறவுள்ளன.

வவுனியா வளாக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் ஆர்.ஜெயக்குமார், வவுனியா வளாக விரிவுரையாளர் ரி.கார்த்தீஸ்வரன், இரசாயனவியல் ஆசிரியர் ஏ.எஸ்.பரந்தாமன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X