2025 ஜூன் 07, சனிக்கிழமை

பாலங்குளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிளிநொச்சி பாலங்குளத்தின் புனரமைப்புப்;பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக” மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அக்கராயன் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள பாலங்குளத்தின் புனரமைப்புப்பணிகளுக்காக 2.2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தற்போது, குளத்தின் புனரமைப்பு வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும் குளக்கட்டின் 100 மீற்றர் வரையான பகுதி வேலைகள் மட்டுமே உள்ளன. அவையும் விரைவில் நிறைவு பெற்றுவிடும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .