2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாங்குளத்தில் அதிவேக ரயில் தரித்து செல்ல வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'யாழ்ப்பாணம் - கொழும்புக்கான அதிவேக ரயில், மாங்குளம் ரயில் நிலையத்தில் தரித்துச் செல்வதற்கு பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாங்குளம் நகர மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'காலை 11.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் செல்லும் போது, மாங்குளத்தில் நிறுத்தாமல் செல்கின்றது. அதேபோல், மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், மாங்குளத்தில் நிறுத்தாமல் செல்கின்றது.

எனவே, முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய நகரமான மாங்குளம் புகையிரத நிலையத்தில், சகல ரயில்களும் தரித்துச் செல்வதற்கு வழியேற்படுத்த வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X