Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணாமற்போனேரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வில் 155 பேர் சாட்சியமளித்தனர்.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் சாட்சியமளிக்கும் இந்த அமர்வு, மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 250 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர். அவர்களில் 155 பேர் சாட்சியங்களை பதிவு செய்தனர். இதனைவிட 76 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான சாட்சியங்கள் பதிவு செய்யும் அமர்வு, கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வியாழக்கிழமை (28) இறுதிநாள் அமர்வாக பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 194 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
38 minute ago
44 minute ago