Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், வங்காலை மீனவக் கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (25) மாலை தூண்டல் மூலம் கணவாய் பிடிப்பதற்குச் சென்ற மீனவர்கள் மீது கடலில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வங்காலை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ராஜன் மார்க் தெரிவித்தார்.
தற்போது நிலவு காலம் என்பதினால் கணவாய் அதிகளவில் பிடிபட்டு வருகின்றது. இதனால் வங்காலைக் கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான மீனவர்கள் கணவாய் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வங்காலை கிராமத்தைச் நேர்ந்த 3 மீனவர்கள், படகு ஒன்றில் நேற்று (25) மாலை தூண்டல் மூலம் கணவாய் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது, வேறு கிராம மீனவர்களினால் கடலின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலையில் இம்மீனவர்களின் கணவாய் தூண்டில் மாட்டியமையால் அத்தூண்டலை வலையில் இருந்து எடுக்க மீனவர்கள் முற்பட்டுள்ளனர்.
இதன்போது பிறிதொரு படகில் வந்த சிலர் எவ்வித கதைகளும் இன்றி கொண்டு வந்த இரும்புக் கம்பிகளினால் வங்காலை கிராம மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதோடு, வங்காலை மீனவர்களின் படகில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை பறித்ததோடு, ஒரு மீனவரைக் கடுமையாக தாக்கி கடலில் தூக்கி எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.
கடலில் தூக்கி விசப்பட்ட மீனவர், நீண்ட நேரமாகியும் கரை திரும்பாத நிலையில் வங்காலை மீனவர்கள் கடலில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, மன்னார் சௌத்பார் கடற்கரையில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், குறித்த மீனவரை மீட்டு சௌத்பார் கடற்கரைக்கு அழைத்துவந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவர் நீந்தி கரை சேர்ந்ததோடு மேலும் ஒரு மீனவர் படகின் மூலம் கரை திரும்பியுள்ளார்.
பின்னர், வங்காலை கிராம மீனவர்கள், இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடலில் போடப்பட்டுள்ள பட்டி வலை தடை செய்யப்பட்ட தொழிலாகக் காணப்படுகின்றது. குறித்த பட்டி வலைகளை அகற்றுமாறு பல தடவைகள் கோரிக்கை விடப்பட்டுள்ள போதும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றனர்.
வங்காலை கடலில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் வேறு கிராம மீனவர்கள் பட்டி வலைகளை அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வங்காலை கிராம மீனவர்கள் கடுமையாகத் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காலை மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ராஜன் மார்க் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago