2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீனவர் பிரச்சினைகளைக் கையாள குழு நியமனம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, நாயாற்றில் மீன்பிடியில் ஈடுபடும் பிறமாவட்ட மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக  குழுவொன்று அமைத்து விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாயாறு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்க சமாசத்தின் பிரதிநிதிகள், கடற்படை, பொலிஸார் ஆகியோரை இணைத்து உருவாக்கப்படும் இந்தக் குழு மூலம், நாயாற்று பிரச்சினைக்கான தீர்வு காணப்படும். இந்தக் குழு அமைப்பதற்கான கூட்டம் விரைவில் மாவட்டச் செயலகத்தில் நடைபெறும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X