2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

வவுனியா, ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில், இன்று (04) அதிகாலை, முல்லைத்தீவு பிரதேச செயலாளரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக, ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில்,

வவுனியா, ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்டப் பகுதியில் வசித்துவரும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் எஸ். குணபாலனின் வீட்டில், ஜன்னல் கம்பியினூடாக உட்புகுந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்ட கோவிலுக்குரிய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயையும் மனைவியின் தாலி உட்பட 16அரை பவுண் தங்க நகையினையும் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை, வீட்டில் பார்த்தபோது திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி. சுரேஸ்த சில்வாவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன், கைரேகை நிபுணர்களும் விரைந்துடன், ஓமந்தை குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஜ.பி. மகிந்த தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .