2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லையில் 5,901 பெண் தலமைத்துவ குடும்பங்கள்

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார்  5,901 குடும்பங்கள், பெண்களை  தலைமைத்துவமாகக் கொண்டவையான காணப்படுவதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர்  பிரிவுகளிலும் மீள்குடியேறியுள்ள சுமார் 42,158 குடும்பங்களில் 5,901 குடும்பங்கள், பெண் தலைமைத்தவம் கொண்டவையாகும்.

கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,577 குடும்பங்களும் புதுக்குடியிருப்பில் 1,852, ஒட்டுசுட்டானில் 1,055, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில்  636 குடும்பங்கள், மாந்தை கிழக்கு 444, வெலிஓயாவில் 337 குடும்பங்கள் என சுமார் 5,901 குடும்பங்கள் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றன.

இதில் 19 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

இவற்றில், 4, 488 குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்களாகவும் ஏனைய குடும்பங்கள் கணவனைப்பிரிந்து வாழும் குடும்பங்களாகவும் காணப்படுவதுட்ன இவற்றில் காணாமல் போனவர்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விட மனைவியை இழந்த நிலையில் 236 குடும்பங்களும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .