2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மக்கள் குறைகேள் சந்திப்பு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வேணாவில் கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

வேணாவில் கிராமத்தின் மாதர் அபிவிருத்திச் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய, வேணாவில் பொது மண்டபத்தில் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள், தம் கிராமத்தில் பெரும்பாலானோர் கூலித்தொழிலை நம்பியுள்ளதுடன் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள் எனத் தெரிவித்தனர்.  

அத்துடன், கிராமத்தின் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையையும் சுட்டிக்காட்டினர். 

2016ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுதர இயன்றளவு நடவடிக்கை எடுப்பதாக ரவிகரன், மக்களிடம் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X