2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் சுகாதார சீர்கேடு

Niroshini   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்துக்கு பின் பகுதியில் உள்ள மலசலகூடத் தொகுதி ஏற்கனவே அகற்றப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ச்சியாக நிலவும் சுகாதார சீர்கேடுகளினால் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் காணப்பட்ட மலசல கூட தொகுதி அகற்றப்பட்டு பிரிதொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த பகுதிக்கு வருபவர்கள் சிறுநீர் கழிப்பதோடு மது பானங்களையும் அப்பகுதியில் வைத்து அருந்துகின்றனர்.இதனால்,அதிகளவான மதுபானப்போத்தல்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன.

அது மட்டுமின்றி கழிவுப்பொருட்களும் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.இதனால், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் நகர சபையின் கவனத்துக்கு கலமுறை கொண்டு வந்தபோதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே மன்னார் நகர சபை இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சீர்செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X