Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் எமிழ் நகர் பகுதியில் சுமார் 23 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள அதி நவீன வசதிகளைக் கொண்ட விளையாட்டு அரங்கின் ஆரம்பப்பணிகள் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் எமிழ் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த அதி நவீன வசதிகளை கொண்ட விளையாட்டரங்கு, அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால், வேறு கிராமம் ஒன்றில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால், மன்னார் எமிழ் நகர் பகுதியில் குறித்த விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள், சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதனால் இந்த விளையாட்டரங்கு தொடர்பாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததோடு, குறித்த மைதானம் எமிழ் நகர் பகுதியிலே அமைக்கப்பட வேண்டும் எனவும் இதனால் சகல கிராம விளையாட்டு வீரர்களும் பயனடைவார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.
இதனால், விளையாட்டரங்கு மன்னார் எமிழ் நகர் பகுதியிலே அமைப்பதற்கான சகல அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
43 minute ago
48 minute ago