2025 ஜூலை 12, சனிக்கிழமை

மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், கே.கண்ணன்

மன்னார்,  தாழ்வுப்பாடு பிரதான வீதியில் இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம், புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் லோகநாதன் சஞ்ஜீவ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சூசை, கலந்து கொண்டு வைபவ ரீதியாக குறித்த அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகமாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவித்தல், புதிய மரமுந்திரிகை கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இந்த அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .