Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, மூங்கிலாற்று பிரதேசத்தில் மர்மப்பொருள் இருப்பதாக திடீர் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மின் வழங்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (21) பிற்பகல் 1.30க்கு மின்கம்பம் நாட்டுவதற்காக குழிகள் வெட்டியுள்ளனர்.
இவ்வாறு மூங்கிலாற்று பிரதான வீதி அருகில் மண்ணைத்தோண்டும் பொழுது மர்மப்பொருள் தட்டுப்படும் சத்தத்தை உணர்ந்த மின்சாரசபை ஊழியர்கள், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
மின்சாரசபை அதிகாரிகள் விசுவமடு பொலிஸ்பிரிவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த இடத்தை அகழ்ந்தனர்.
எனினும், அதற்குள் இருந்து ஆட்லரி செல்லின் வெற்றுக்கோதும் கூரைத்தகடுகள் மட்டுமே மீட்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
46 minute ago