Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
தற்போது மழைக் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், மழை காலத்தில் ஏற்படும் இடர்களை எதிர்கொள்ளும் வகையிலான விசேட ஏற்பாடுகள், பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வழமைபோலவே மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய இடர்களை கருத்தில்கொண்டு மாவட்ட மட்டத்தில் கூட்டம் கூடி மழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஒரு முன்னேற்பாடு ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாகவும் மழைக் கால இடரினை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago