Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 02, திங்கட்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், மழை பெய்யும் பட்சத்தில், மன்னார் சதொச வளாகம் முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில், கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக, திடீரென மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதால், குறித்த வளாகத்தின் முன் பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது.
தற்போது வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திடீரென மழை பெய்யும் பட்சத்தில், குறித்த
வளாகமானது, முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் சதோச வளாகத்தில், இன்று (27) 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 95 மனித எச்சங்கள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட எச்சங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, சுமார் 440க்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்றப் பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
22 minute ago
2 hours ago