2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’மாமா வேலை செய்வதை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு, மாமா வேலை செய்வதை நிறுத்த வேண்டுமென, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் மூதாளர்  உதவித்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்துரைத்த அவர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவ்வாறான குடும்பங்களுக்கு மக்கள் நலன் காப்பகம், புலம்பெயர் உறவுகள் பலரும் உதவ முன்வந்துள்ளமையை பாராட்டினார்.

இதேவேளை, யுத்தத்தால் சேதமடைந்த வீடுகள் உள்ளிட்டவற்றை சீர்செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .