Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில், மீள் குடியேற்றம் செய்வதற்கு பதிவுகள் மேற்கொள்ளத்தவறியவர்கள் 28ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளில் எதிர்காலத்தில் காணிகள் கையளிக்கப்படும் போது, மீள்குடியேற்ற செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு, மீள் குடியேற்றம் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“இதற்கமைய, இப்பகுதியில், இதுவரை மீள்குடியேற்றம் செய்வதற்கு பதிவுகள் மேற்கொள்ளத் தவறியவர்கள் 28ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago