2025 மே 21, புதன்கிழமை

முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

 

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 77 பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள், இன்று (01) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இவர்களில் 14 பேர், ஏற்கெனவே நியமனம் பெற்றவர்கள் என்பதால், அவர்களைத் தவிர்த்து 112 பேருக்கான நியமனங்களை வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், ஏற்கெனவே கொழும்பில் வைத்து, 35 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கோ. தனபாலசுந்தரம் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .